வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

167வது ஆண்டு விழாவை கொண்டாடியது மத்திய பொதுப் பணித்துறை

Posted On: 12 JUL 2021 5:41PM by PIB Chennai

மத்தியப் பொதுப் பணித்துறை, நாட்டுக்கு சேவையாற்றியதன்  167வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடியதுகொரோனா தொற்று காரணமாக, இந்நிகழ்ச்சி எளிமையாக நடத்தப்பட்டது.

இதில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டார். இத்துறை இணையமைச்சர் திரு கவுசல் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில், இத்துறை செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ராவும் கலந்து கொண்டார்.

துவக்க நிகழ்ச்சியில், மத்திய பொதுப்பணித்துறையின் 4 தொழில்நுட்ப வெளியீடுகளான, மத்திய பொதுப் பணித்துறையின் மலர் அட்டவணை: ஒரு சேகரிப்பு களஞ்சியம், இஆர்பி -தொகுதிகள், நிர்மான்பாரதி- மத்திய பொதுப் பணித்துறையின் வெளியீடு மற்றும் மத்திய பொதுப் பணித்துறையின் தொலைபேசி கையேடு ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் வெளியிட்டனர்.

மத்தியப் பொதுப் பணித்துறையின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை கூறும் குறும் படமும் இந்நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மத்திய பொதுப் பணித்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மத்தியப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தாங்கள் தயாரித்த தொழில்நுட்ப விளக்கங்களை விவரித்தனர்.

 

----



(Release ID: 1734867) Visitor Counter : 209