எரிசக்தி அமைச்சகம்

மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சராக திரு ராஜ் குமார் சிங் பொறுப்பேற்றார்

Posted On: 08 JUL 2021 1:09PM by PIB Chennai

மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சராக திரு ராஜ் குமார் சிங் பொறுப்பேற்றார்.  இந்த பொறுப்பை வழங்கியதற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவித்த, திரு ஆர்.கே.சிங், பிரதமர் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், நாங்கள் அதற்கேற்ப செயல்படுவோம் என்றார்

அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் நிர்ணயித்த மின்மயமாக்கல் இலக்கை நாங்கள் குறித்த காலத்துக்கு முன்பே அடைந்துள்ளோம் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையின் பயன்கள் பொது மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பாடுபடுவோம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் அவருக்கு மூத்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733614

 

-----



(Release ID: 1733740) Visitor Counter : 180