அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

2-டிஜி மருந்தின் கூட்டு முயற்சியில் சேர்வதற்கான ஒப்பந்தம்: சிஎஸ்ஐஆர்-ஐஐசிடி, லீ ஃபார்மா இணைந்துள்ளன

Posted On: 09 JUN 2021 2:23PM by PIB Chennai

அறிவியல்  மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஆய்வகமான இந்திய ரசாயண தொழில்நுட்பக் கழகமும் (ஐஐசிடி), ஹைதராபாத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த மருந்து நிறுவனமான லீ ஃபார்மாவும், 2-டியாக்சி-டி-க்ளுகோஸ் (2-டிஜி) மருந்தின் கூட்டுமுயற்சியில் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள 2-டிஜி மருந்தை கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சையில் பயன்படுத்த  அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது. பொட்டலங்களில் கிடைக்கும் இந்த மருந்து, தொற்றிலிருந்து விரைவில் குணமடையவும், பிராணவாயுவின் தேவையைக் குறைக்கவும் உதவிகரமாக இருந்து வருகிறது.

இதற்கான ஒப்புதலைப் பெறுவது தொடர்பாக, புதுதில்லியில் உள்ள மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்க இருப்பதாக லீ ஃபார்மா தெரிவித்தது. சிறப்பு பொருளாதார மண்டலம், துவ்வடா, விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசத்தில் சர்வதேச ஒழுங்குமுறை முகமைகளால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள லீ ஃபார்மா நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் 2-டிஜி மருந்து பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, வர்த்தக ரீதியாக விற்பனை செய்யப்படும்.

இதுபற்றி பேசிய சிஎஸ்ஐஆர்-ஐஐசிடியின் இயக்குநர் டாக்டர் ஸ்ரீவாரி சந்திரசேகர், “சிஎஸ்ஐஆர்- உயிரணுக்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சிசிஎம்பி) , 2- டிஜி மருந்தை கொவிட் தொற்று மாதிரிகளில் சோதனை செய்து இந்த மருந்தின் தயாரிப்பில் பங்கு கொண்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏராளமான மருந்துகளையும், மறுபயன்பாடு மருந்துகளின் மீது மருத்துவப் பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளது. லீ ஃபார்மா நிறுவனத்துடனான இந்த உடன்படிக்கை, குறைந்த செலவில் கொவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கிய நடவடிக்கையாகும்”, என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725576

 

----



(Release ID: 1725656) Visitor Counter : 241