பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு நெகிழ்வு வருகைப்பதிவு முறை ஜூன் 15 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

Posted On: 01 JUN 2021 5:14PM by PIB Chennai

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அதிகாரிகளின் கூட்டமொன்றுக்கு தலைமை வகித்த வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு நெகிழ்வு வருகைப்பதிவு முறை ஜூன் 15 வரை மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்,.

நெகிழ்வு வருகைப்பதிவு முறை வசதியை வழங்கிய முந்தைய உத்தரவின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது. அதர்கு முன்பு 50 சதவீத வருகைப்பதிவுடன் செயல்பட அலுவலகங்கள் பணிக்கப்பட்டன.

(அ) அலுவலகத்தில் கொவிட் பாதிப்புகள் மற்றும் செயல்பாட்டு தேவையை கருத்தில் கொண்டு, பணியாளர்களின் வருகையை அனைத்து மட்டங்களிலும் அமைச்சகங்கள்/துறைகளின் செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் ஒழுங்குப்படுத்த வேண்டும், (ஆ) மாற்றுத் திறனாளிக்ள்/கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும், (இ) அலுவலகங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வரையில் வெவ்வேறு நேரங்களில் பணியாளர்கள் வர வேண்டும், (ஈ) கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் மற்றும் தொலைபேசி மற்றும் இதர மின்னணு தொடர்பு முறையின் மூலம் தொடர்பில் இருக்க வேண்டும், (உ) அலுவலகம் வரும் பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சரியான கொவிட் நடத்தைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது புதிய உத்தரவின் முக்கிய அம்சங்களாகும்.

மேற்கண்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், அதே சமயம், அலுவலக பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாதென்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், அனைத்து பணியாளர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

<><><><><>



(Release ID: 1723470) Visitor Counter : 214