எரிசக்தி அமைச்சகம்

ரேபரேலி நிர்வாகத்திடம் ஆக்ஸிஜன் ஆலையை ஒப்படைத்தது என்டிபிசி

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAY 2021 3:35PM by PIB Chennai

மத்திய மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC), கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து உதவி வருகிறது. தற்போது உன்சாஹர் பகுதியில் உள்ள என்டிபிசி நிறுவனம், ஆக்ஸிஜன் ஆலை ஒன்றை ஏற்படுத்தி அதை ரேபரேலி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்ததுஇதன் மூலம் தேவைப்படும் மக்களுக்கு ஆக்ஸிஜன் வசதி உடனடியாக கிடைக்கும்.

இதற்கு முன், 10 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உன்சாஹர் சமுதாய சுகாதார மையத்துக்கு வழங்கப்பட்டன. இந்த நெருக்கடியான சூழலில், உன்சாஹர் என்டிபிசி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, கிராம மக்களுக்கு சிறந்த சுகாதார வசதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1723160) வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu