ரெயில்வே அமைச்சகம்

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகித்த திரவ மருத்துவ ஆக்ஸிஜன் அளவு 15,000 மெட்ரிக் டன்களை கடந்தது

Posted On: 23 MAY 2021 1:41PM by PIB Chennai

பல தடைகளை கடந்து, பல மாநிலங்களுக்கு  இந்திய ரயில்வே தொடர்ந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜனை விநியோகித்து வருகிறது. இதுவரை, இந்திய ரயில்வே, பல மாநிலங்களுக்கு 936 டேங்கர்களில், 15,284 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது.

இதுவரை 234 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள்  பயணத்தை முடித்து, பல மாநிலங்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.

தற்போது 9 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 31 டேங்கர்களில் 569 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை  கொண்டு செல்கின்றன.

அசாம் மாநிலத்துக்கு முதல் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்,  80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடன் இன்று காலை சென்றது

கர்நாடகாவுக்கு, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு 1000 மெட்ரிக் டன்களை கடந்து விட்டது.

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒவ்வொரு நாளும், 800 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட ஆக்ஸிஜனை விநியோகிக்கின்றன.

உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 14 மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக்ஸிஜனை வழங்கி நிவாரணம் அளித்துள்ளன.

தற்போது வரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப்பிரதேசத்துக்கு 3609, மத்தியப் பிரதேசத்துக்கு 566, தில்லிக்கு 4300, ஹரியானாவுக்கு 1759, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 1063, உத்தரகாண்டுக்கு 320, தமிழகத்துக்கு 857, ஆந்திராவுக்கு 642, பஞ்சாப்புக்கு 153, கேரளாவுக்கு 246, தெலங்கானாவுக்கு 976, அசாமுக்கு 80 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721032

------



(Release ID: 1721070) Visitor Counter : 192