ரெயில்வே அமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு 224 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 14500 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம்

Posted On: 22 MAY 2021 4:02PM by PIB Chennai

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம், இந்திய ரயில்வே, இதுவரை 884 டேங்கர்களில் 14500 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

இதுவரை 224 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 35 டேங்கர்களில் 563 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 8 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் பிராணவாயு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 769 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3463 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 566 மெட்ரிக் டன், தில்லிக்கு சுமார் 4278 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 1698 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 943 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 571 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 153 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 246 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 772 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720874

*****************



(Release ID: 1720905) Visitor Counter : 200