ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

டிஏபி உர மானியம் 140% அதிகரிப்பு : பிரதமருக்கு மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் நன்றி

Posted On: 20 MAY 2021 12:58PM by PIB Chennai

காரீப் பருவத்துக்கு டிஏபி , பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ( பி மற்றும் கே) மானியங்களை உயர்த்தியதற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு சதானந்த கவுடா இன்று தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இந்த முடிவு லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என அவர் கூறினார்.

டை அமோனியம் பாஸ்பேட்(டிஏபி) உரத்துக்கான மானியம் மூட்டை ஒன்றுக்கு ரூ.511-லிருந்து ரூ.1211-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே முறையில் மானியம் மூட்டை ஒன்றுக்கு ரூ.700/- உயர்ந்துள்ளது.  இதன் மூலம் டிஏபி உர மூட்டை, கடந்தாண்டு விலையான ரூ.1200 க்கே தொடர்ந்து கிடைக்கும். இதற்கான மானியம் 140 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதர பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களும் கடந்தாண்டு விலை அளவுக்கே குறையும். காரீப் பருவத்தில் மத்திய அரசு கூடுதலாக ரூ.14,775 கோடி மானியமாக செலவிடும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720200

*****************



(Release ID: 1720265) Visitor Counter : 301