ரெயில்வே அமைச்சகம்

196 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 11800 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயு விநியோகம்

Posted On: 19 MAY 2021 5:45PM by PIB Chennai

நாடு முழுவதும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாயிலாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகம் செய்யும் இந்திய ரயில்வே, இதுவரை 727 டேங்கர்களில் 11,800 மெட்ரிக் டன் பிராணவாயுவைக் கொண்டு சேர்த்துள்ளது.

இதுவரை 196 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 43 டேங்கர்களில் 717 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 11 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த நாட்களாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் பிராணவாயு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 440 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 521 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 2979 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 498 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 1507 மெட்ரிக் டன்தெலங்கானாவிற்கு 653 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 97 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 481 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 200 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 227 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 81 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 117 மெட்ரிக் டன், தில்லிக்கு சுமார் 3978 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719968

                                                                                      -----



(Release ID: 1720045) Visitor Counter : 248