இந்திய போட்டிகள் ஆணையம்

யெஸ் அசட் மேனேஜ்மென்ட் (இந்தியா) மற்றும் யெஸ் டிரஸ்டீ நிறுவனங்களின் பங்குகளை ஜிபிஎல் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல்

Posted On: 18 MAY 2021 6:03PM by PIB Chennai

யெஸ் அசட் மேனேஜ்மென்ட் (இந்தியா) மற்றும் யெஸ் டிரஸ்டீ ஆகிய நிறுவனங்களை ஜிபிஎல் ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு இந்திய போட்டியியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி யெஸ் அசட் மேனேஜ்மென்ட் (இந்தியா) மற்றும் யெஸ் டிரஸ்டீ ஆகிய நிறுவனங்களின் 100 சதவீத பங்குகளை ஜிபிஎல் நிறுவனம் பெற்றுக் கொள்ளும். இதையடுத்து யெஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முழுவதையும் ஜிபிஎல் நிறுவனம் வாங்கிக்கொண்டு அதன் ஒற்றை உரிமையாளராக செயல்படும்.

இந்திய போட்டியியல் ஆணையத்தின்  விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719649

-----



(Release ID: 1719732) Visitor Counter : 156