உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கடைக்கோடியில் இருப்பவர்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்வதற்காக டிரோன்கள் மூலம் தடுப்பு மருந்து விநியோகம்

Posted On: 08 MAY 2021 4:41PM by PIB Chennai

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போருக்கு வலுவூட்டும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டிரோன் என்று அழைக்கப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தடுப்பு மருந்துகளை விநியோகிப்பதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அரசு வழங்கி வருகிறது.

பரிசோதனை அடிப்படையில் தடுப்பு மருந்துகளை டிரோன் மூலம் விநியோகிப்பதற்காக தெலங்கானா அரசுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ஆகியவை நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. ஆளில்லாத விமானம் அமைப்பு விதிகள் 2021-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

கண்ணுக்கு தெரியும் இடங்கள் வரை டிரோன் மூலம் தடுப்பு மருந்து விநியோகிப்பதற்கு தெலங்கானா அரசுக்கு கடந்த மாதம் நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதை மேலும் மேம்படுத்துவதற்காக, கண்ணுக்கு புலப்படாத இடங்களுக்கும் டிரோன் மூலம் தடுப்பு மருந்து விநியோகிப்பதற்கு தெலங்கானா அரசுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டிரோன்களை பயன்படுத்தி கொவிட்-19 தடுப்பு மருந்துகளை விநியோகிப்பது குறித்து ஐஐடி கான்பூர் உடன் இணைந்து ஆய்வு செய்வதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது

தடுப்பு மருந்துகளை வேகமாக விநியோகிப்பதற்கும், மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.

உத்தரவு மற்றும் விரிவான நிபந்தனைகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

**



(Release ID: 1717077) Visitor Counter : 170