எரிசக்தி அமைச்சகம்

கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய அனல் மின் நிலையங்கள் ஆதரவு

Posted On: 08 MAY 2021 2:59PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் தேசிய அனல் மின் நிலையம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனது ஆதரவை அளித்து வருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு தேசிய தொகுப்பிலிருந்து எரிசக்தி தடைபடாமல் வழங்கப்படுவதையும், அவசர கால சேவைகள் தங்குதடையின்றி மேற்கொள்ளப்படுவதையும் எரிசக்தித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் உறுதி செய்தனர்.

நிதி உதவி முதல் முழு உடல் பாதுகாப்புக் கவசங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்குவது வரையிலான பல்வேறு உதவிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. மஸ்தூரியில் கொவிட் சிகிச்சை மையத்தை உருவாக்குவதற்காக அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டிய நிதி உதவியை சிப்பட்டில் உள்ள தேசிய அனல் மின் நிலையம் வழங்கும்.

அதேபோல கோர்பா நிலையம், அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் கருவிகளை வழங்க உள்ளது. மேலும் அருகில் உள்ள கிராமங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியிலும் அந்த நிலையம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

லாராவில் உள்ள நிலையம், செயற்கை சுவாசக் கருவிகளை வாங்குவதற்கான நிதியை ராய்கர் ஆட்சியாளரிடம் வழங்கியுள்ளது.

இதேபோல கார்கோனில் உள்ள தேசிய அனல் மின் நிலையம், சனாவாத் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுக்கு பிராணவாயு வசதியை ஏற்படுத்துவதற்கான நிதியை வழங்கவிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717012

----



(Release ID: 1717050) Visitor Counter : 191