சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

2021 மே 25 வரை தனது அனைத்து உற்பத்தியையும் மத்திய அரசுக்கு மட்டும் வழங்குவதற்கு சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருக்கவில்லை

प्रविष्टि तिथि: 22 APR 2021 7:24PM by PIB Chennai

2021 மே 25 வரை தனது அனைத்து உற்பத்தியையும் மத்திய அரசுக்கு வழங்குவதற்கு இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருக்கிறதென்றும், இதன் காரணமாக மாநில அரசுகள் அந்நிறுவனத்திடம் இருந்து மேற்குறிப்பிட்ட தேதி வரை தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய முடியாதென்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை மட்டுமில்லாமல், எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாதவை ஆகும்.

நாடு தழுவிய தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை மே 1 முதல் பரவலாக்கவும் விரிவுப்படுத்தவும் மத்திய அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்க வேண்டும்.

தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும் மாநிலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே, 50 சதவீத தடுப்புமருந்துகள் இந்திய அரசு தவிர்த்த மற்ற பிரிவினருக்கு கிடைக்கும் என்பது தெளிவாகிறது.

செயல்திட்டத்தை இங்கே காணலாம்: https://www.mohfw.gov.in/pdf/LiberalisedPricingandAcceleratedNationalCovid19VaccinationStrategy2042021.pdf

2021 ஏப்ரல் 19-ம் தேதியிட்ட செய்திக் குறிப்பை இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712710

*****************


(रिलीज़ आईडी: 1713480) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu