பிரதமர் அலுவலகம்

மகாத்மா ஜோதிபா புலே பிறந்தநாளில் பிரதமர் மரியாதை

Posted On: 11 APR 2021 8:52AM by PIB Chennai

சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தத்துவ அறிஞரும் மற்றும் எழுத்தாளருமான மகாத்மா ஜோதிபா புலேவின் பிறந்தநாளில், அவருக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பெண்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக, ஜோதிபா புலே தனது வாழ்க்கை முழுவதும் உறுதியுடன் செயல்பட்டார் என திரு நரேந்திர மோடி கூறினார்.

சமூக சீர்திருத்தத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு, வரும்கால தலைமுறையினருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என பிரதமர் மேலும் கூறினார்.

                                                                                                                          -------



(Release ID: 1711014) Visitor Counter : 208