பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தினவிழா அணிவகுப்பு 2021: ஜாட் படைப் பிரிவு மற்றும் தில்லி காவல்துறைக்கு பரிசு கோப்பை வழங்கினார் பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
15 FEB 2021 1:12PM by PIB Chennai
தில்லியில் நடைப்பெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் அணிவகுத்து வந்த முப்படைகளின் பிரிவில், சிறந்த அணிவகுப்பிற்காக ராணுவத்தின் ஜாட் படைப்பிரிவும், மத்திய ஆயுதப்படைகள் பிரிவில், தில்லி காவல்துறையும் சிறந்த அணிகளாக தேர்வு செய்யப்பட்டன.
இதற்கான பரிசு கோப்பைகளை தில்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று வழங்கினார்.
ஜாட் படைப்பரிவு மையம் சார்பில், பிரிகேடியர் ஆதர்ஷ் கே பூடெய்ல் மற்றும் சுபேதார் மேஜர் வீரேந்திரா ஆகியோர் பரிசு கோப்பையை பெற்றுக் பெற்றுக் கொண்டனர்.
தில்லி காவல் துறை சார்பில் சிறப்பு ஆணையர் திரு. ராபின் ஹிபு மற்றும் உதவி ஆணையர் திரு. விவேக் பகத் ஆகியோர் பரிசு கோப்பையை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், கோப்பைகளை வென்ற ஜாட் படைப்பிரிவு மையம், தில்லி காவல்துறை ஆகியவற்றை பாராட்டினார். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைக்கும் மரியாதையின் அடையாளம் இந்த கவுரவம் என அவர் கூறினார்.
இந்தியாவின் மையப் பகுதியாக இருக்கும் தில்லியின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சிறந்த அணிவகுப்புக்கான கோப்பையையும், தில்லி காவல் துறை தொடர்ந்து பெறுவதாக திரு. ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், முப்படை தளபதிகள், டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698077
------
(Release ID: 1698171)
Visitor Counter : 166