குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட அசாமின் பழமையான காதி நிறுவனத்தை புதுப்பிப்பு – கதர் கிராமத் தொழில்கள் ஆணையம்

प्रविष्टि तिथि: 28 JAN 2021 3:08PM by PIB Chennai

அசாம் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடோ தீவிரவாதிகளால் எரிக்கப்பட்ட பழமையான காதி நிறுவனத்தை, கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மீண்டும் புதுப்பித்து, செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

 அசாம் மாநிலத்தின் பக்ஷா மாவட்டத்தில் உள்ள காதி தொழிற் கூடத்தை, போடோ தீவிரவாதிகள் கடந்த 1989ம் ஆண்டு தீ வைத்து எரித்தனர்அதை கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் பட்டு நெசவு மையமாக புதுப்பித்துள்ளது. இங்கு 15 பெண் கலைஞர்கள் மற்றும் 5 இதர ஊழியர்களுடன் பட்டு நெசவுப் பணிகள், பிப்ரவரி 2ம் வாரத்தில்  மீண்டும் தொடங்கவுள்ளன.

இது குறித்து கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா கூறுகையில், கதர் தொழிற் கூடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. காதி பணிகள் மீண்டும் தொடங்குவது, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்’’ என்றார்

இந்த கதர் தொழிற்கூடம், கவுகாத்தியிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் நிதியதவி மூலம் இந்த தொழிற் கூடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692913

******

(Release ID: 1692913)


(रिलीज़ आईडी: 1692930) आगंतुक पटल : 283
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Telugu , English , Urdu , Manipuri , Punjabi