சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
குடும்ப கட்டுப்பாடு 2020, நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை
Posted On:
26 JAN 2021 8:35PM by PIB Chennai
‘‘குடும்ப கட்டுப்பாடு 2020: முன்னேற்றத்தை கொண்டாடுதல், எதிர்காலத்துக்கான மாற்றம்’’ என்ற தலைப்பிலான மெய்நிகர் நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பங்கேற்றார்.
2019-20ம் ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கையை வெளியிடுவது, குடும்ப கட்டுப்பாட்டில் அடுத்த கட்டத்துக்கான நடவடிக்கையை தொடங்குவதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:
2020 குடும்ப கட்டுப்பாடு திட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றதற்கு நன்றி. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் இணைந்திருப்பதை இந்தியா எப்போதும் மதிக்கிறது. உலகம் முழுவதும் குடும்ப கட்டுப்பாடு சேவைகளை வலுப்படுத்துவதில், இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது. தேசிய குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முதலில் உருவாக்கிய நாடு இந்தியா. கடந்த 1952ம் ஆண்டே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, கருத்தரிப்பு மற்றும் பேறுகால இறப்புகள் இந்தியாவில் குறைந்துள்ளன. 2030ம் ஆண்டுக்குள், குறைபாடுள்ள கருத்தரிப்பை குறைக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.
ஒவ்வொரு குழந்தையும் தேவையானது, ஒவ்வொரு குழந்தை பிறப்பும் பாதுகாப்பானது மற்றும் ஒவ்வொரு பெண்ணும் கவுரவத்துடன் நடத்தப்படுவது என்ற தொலைநோக்குடன் புதுமையான அணுகுமுறையை அமல்படுத்துவதுதான் எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692544
**********************
(Release ID: 1692551)
Visitor Counter : 237