மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதில் அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் பங்கு பெறுவது குறித்த கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் தலைமை வகித்தார்

Posted On: 21 JAN 2021 5:15PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதில் அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் பங்கு பெறுவது குறித்த கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்  தலைமை வகித்தார்.

உயர் கல்வி செயலாளர் திரு அமித் காரே, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு செயலாளர் திருமதி அனிதா கர்வால், யுனெஸ்கோ புது தில்லி இயக்குநர் திரு எரிக் ஃபால்ட், அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவன தலைவர் பேராசிரியர் ஜே எஸ் ராஜ்புத், அந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அனந்த துரையப்பா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேசிய கல்வி கொள்கை-2020-ஐ குறித்து பேசிய அமைச்சர், யுனெஸ்கோவின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை சார்ந்து அது இருப்பதாகவும், இந்திய மாணவர்களை சர்வதேச குடிமக்களாக அது மாற்றுமென்றும், கருணை, அன்பு மற்றும் கூர்மையான சிந்தனைகளை வளர்க்குமென்றும் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில், அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ ஆகியவை முக்கிய பங்காற்றும் என்று கூறிய அமைச்சர், இந்தியாவை அறிவுசார் தலைநகரமாக மாற்றும் விதத்தில் தேசிய கல்வி கொள்கை-2020-ஐ செயல்படுத்துவது குறித்து அவர்களின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பை வரவேற்றார்.

2030 நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்திய அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் கூறினார். நிஷிதா, திக்‌ஷா, சமாக்ர சிக்‌ஷா அபியான் போன்ற திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1690898

**********************

 



(Release ID: 1690977) Visitor Counter : 120


Read this release in: English , Urdu , Hindi , Punjabi