சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
லக்னோவில் ஜனவரி 22ம் தேதி முதல் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ஆன்லைனிலும்
Posted On:
20 JAN 2021 1:51PM by PIB Chennai
கைவினைக் கலைஞர்களின் உள்ளூர் தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்புகளை வழங்குவதற்காக, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, 24வது கைவினைப் பொருட்கள் கண்காட்சியை உத்தரப்பிரதேசம் லக்னோவில் உள்ள அவாத் ஷில்ப்கிராமில் ஜனவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடத்துகிறது.
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற மையக் கருத்துடன் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் 31 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், பிகார், சண்டிகர், சட்டீஸ்கர், தில்லி, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 500 கலைஞர்கள், சமையல் கலைஞர்கள் லக்னோவில் நடைபெறும் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு தங்கள் தயாரிப்புகளை விற்க வந்துள்ளனர்.
லக்னோவில் நடைபெறும் கைவினைப் கண்காட்சியில் விற்கப்படும் பொருட்களை http://hunarhaat.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690325
******
(Release ID: 1690325)
(Release ID: 1690430)