தேர்தல் ஆணையம்

ஆந்திரப் பிரதேச மேலவைக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு

Posted On: 06 JAN 2021 2:36PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மேலவையில், ஒரு உறுப்பினர்  காலியிடத்துக்கான  இடைத்  தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச மேலவை உறுப்பினராக இருந்த       திருமதி பொதுல்லா சுனிதா, கடந்தாண்டு நவம்பர் 1ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்இந்த காலியிடத்துக்கான  இடைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த ஒரு உறுப்பினரை, ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யவுள்ளனர். இந்த இடைத் தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடக்கிறது. அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, ஆந்திரப் பிரதேச தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686519

••••

(Release ID: 1686519)



(Release ID: 1686540) Visitor Counter : 91