நிதி அமைச்சகம்

நாளை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 63-வது நிறுவன தின கொண்டாட்டம்

Posted On: 03 DEC 2020 7:31PM by PIB Chennai

வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தனது 63-வது நிறுவன தினத்தை நாளை (4.12.2020) கொண்டாடுகிறது.

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்த வருட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் காணொலி வாயிலாக நடைபெறும். மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் திரு அனுராக்  சிங் தாக்கூர் ஆகியோர் இதில் கலந்து கொள்வார்கள்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ,செலாவணி பணப்பரிமாற்ற மோசடியைத் தடுப்பது குறித்த குழு விவாதமும்  காணொலி வாயிலாக நடைபெறும். ஆஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்புப் படை பிரதிநிதிகள், இங்கிலாந்து, நெதர்லாந்து  நாடுகளின் வருவாய் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள், இன்டர்போல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த விவாதத்தில் கலந்து கொள்வார்கள். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678108


(Release ID: 1678132)
Read this release in: English , Urdu , Hindi , Telugu