வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு நாட்டுக்குள் வந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2020 5:32PM by PIB Chennai
2020-21-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை 2020 முதல் செப்டம்பர் 2020 வரை) $28,102 மில்லியன் நேரடி அந்நிய முதலீடு நாட்டுக்குள் வந்துள்ளது.
இதில் நேரடி அந்நிய பங்கு முதலீடுகளின் மதிப்பு, $23,441 மில்லியன், அதாவது ரூபாய் 174,793 கோடி ஆகும்.
இதன் மூலம் 2020-21-ஆம் நிதியாண்டில் செப்டம்பர் வரை இந்தியாவில் செய்யப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டின் மதிப்பு $30,004 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 15 சதவீதம் அதிகமாகும்.
இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும்போது இது ரூபாய் 224,613 கோடியாகவும் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 23 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676762
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1676846)
வருகையாளர் எண்ணிக்கை : 292