பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்படும்: பெட்ரோலிய அமைச்சர்

Posted On: 19 NOV 2020 2:58PM by PIB Chennai

தங்க நாற்கர சாலை மற்றும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமையவுள்ள முதல் 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்களுக்கான அடிக்கல்லை மத்திய பெட்ரோலியம்இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று நாட்டினார்.

இந்தியாவை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை அடைவதற்காக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமையவுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்படும் என்றார்அனைத்து முக்கிய சாலைகள்தொழில் மையங்கள் மற்றும் சுரங்கப் பகுதிகளில் இவை அமையும் என்று அவர் கூறினார்.

தங்க நாற்கர சாலையின் ஒவ்வொரு 200-300 கிலோமீட்டர் தொலைவிலும் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அரசு நிறுவும் என்று அவர் மேலும் கூறினார்எதிர்காலத்தின் எரிசக்தியாக திரவ இயற்கை எரிவாயு இருக்கப் போகிறது என்று அவர் தெரிவித்தார்.

 

இந்தியாவை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்காக நன்கு சிந்திக்கப்பட்டு உருவாக்கப்பட்ட யுக்தி செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறிய திரு பிரதான்இதற்கான எரிவாயு உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673998

**********************



(Release ID: 1674031) Visitor Counter : 201