பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் -கேம்பல் விரிகுடாவுக்குப் பயணம்

Posted On: 13 NOV 2020 5:45PM by PIB Chennai

கிரேட் நிகோபார் தீவுகளில் கேம்பல் விரிகுடாவில் அமைந்துள்ள கடற்படை விமான தளமான ஐ.என்.எஸ் பாஸ் மையத்துக்கு கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் வருகை புரிந்தார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படை வீரர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (நவம்பர் 13) அவர் ஐ.என்.எஸ். பாஸ் மையத்துக்கு வருகை தந்தார். அவரை கடற்படை விமான தளத்தில் அந்தமான் & நிகோபார் கமாண்ட் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே  வரவேற்றார். வழக்கமான பாதுகாப்பு தயார் நிலை உட்பட கமாண்டின் கட்டமைப்பு அம்சங்கள் மற்றும் தற்போது நிலவி வரும் பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ற செயல்பாட்டு தயார் நிலை குறித்து அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672665

**********************



(Release ID: 1672760) Visitor Counter : 128