பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படையின் தயார்நிலையை தலைமை தளபதி ஆய்வு செய்தார்

प्रविष्टि तिथि: 22 OCT 2020 7:41PM by PIB Chennai

கடற்படையின் தலைமை தளபதியான அட்மிரல் கரம்பிர் சிங், இந்திய கடற்படையின் தயார் நிலையை 2020 அக்டோபர் 22 அன்று ஆய்வு செய்தார்.

மேற்கு கடற்படை தளத்தின் தலைமை அதிகாரி துணை அட்மிரல் அஜித் குமாருடன் கர்வார் கடற்படை தளத்துக்கு வந்தடைந்த கடற்படையின் தலைமை தளபதி, வீரர்களுடன் உரையாடினார்.

பழுதுபார்த்தல், பராமரிப்பு, உதிரி பாகங்கள் விநியோகம் மற்றும் போர் திறனை மேம்படுத்திக் கொள்ளுதல் குறித்து அவர் விவாதித்தார். சைபர்-பாதுகாப்பு, தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு, போர் தளவாடங்கள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்திய அவர், மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் அவர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் 'சென்னையை' பார்வையிட்டார். செயல்பாட்டு தயார்நிலை குறித்து அப்போது அவருக்கு விளக்கப்பட்டது.

வரும் மாதங்களில் அதிக அளவிலான செயல்பாடுகளை கடற்படை மேற்கொள்ளும் என்று கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங்  கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666853

---


(रिलीज़ आईडी: 1666900) आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu