ஆயுஷ்

கொவிட்-19 பின்னணியில் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆய்வு

Posted On: 20 OCT 2020 6:55PM by PIB Chennai

கொவிட்-19 காலத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்த அந்தத் துறையின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா தலைமையில் இன்று நடைபெற்றது.

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கொவிட்-19 பரவலை தடுக்கும் முயற்சியில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய ஆயுர்வேதம் மற்றும் யோகா நெறிமுறைகள் குறித்து  மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் தேசிய ஆயுஷ் இயக்கத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஆயுஷ் சுகாதார மையங்களைச் செயல்படுத்துவது தொடர்பாகவும், இந்த இயக்கத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதி வரத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

 

ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுஷ் கிரிட் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக  ஆலோசிக்கப்பட்டதுஅனைத்து ஆயுஷ் மையங்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள ஆயுஷ் சுகாதார மேம்பாட்டு தகவல் அமைப்பிற்கு (-ஹெச் எம் எஸ்) அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த சுகாதார மேம்பாட்டுத் தகவல் அமைப்பை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666173

------


(Release ID: 1666235)