சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ரூ.19,800 கோடி செலவில் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு
Posted On:
13 OCT 2020 3:30PM by PIB Chennai
கேரளாவில் ரூ.19,800 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் பணிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இவற்றை 2024ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 549 கி.மீ தொலைவில் 30 திட்டங்கள், தற்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
கேரளாவில் கடந்த 6 ஆண்டுகளில், மொத்தம் 50 திட்டங்கள், 828 கி.மீ தூரத்துக்கு ரூ.8032 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிதியாண்டில் மொத்தம் 8 திட்டங்கள், 209 கி.மீ தூரத்துக்கு, ரூ.965 கோடி செலவில் முடிக்கப்படவுள்ளது.
இந்த நிதியாண்டில், 266 கி.மீ தூரத்துக்கு, ரூ.12,765 கோடி செலவில் நெடுஞ்சாலைகள் அமைக்க டெண்டர் அளிக்கப்படவுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மூலமாக, பொதுப்பணித்துறை 416 கி.மீ தூரத்துக்கு, ரூ.13,043 கோடி செலவில் சாலைகள் அமைக்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663983
**********************
(Release ID: 1664032)