ரெயில்வே அமைச்சகம்

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருட அக்டோபரின் முதல் வாரத்தில் ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து சேவையின் அளவும், வருவாயும் அதிகமாக இருந்தது

Posted On: 09 OCT 2020 6:09PM by PIB Chennai

2020 அக்டோபர் 8 வரையிலான இந்திய ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து சேவையின் அளவும், வருவாயும் கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது அதிகமாக இருந்தது.

 

26.14 மில்லியன் டன்கள் சரக்கை 2020 அக்டோபரில் 8-ஆம் தேதி வரை இந்திய ரயில்வே கையாண்டது. கடந்த வருடத்தின் இதே காலகட்டதின் 22.1 மில்லியன் டன்களோடு ஒப்பிடும் போது இது 18 சதவீதம் அதிகமாகும்.

 

இந்த வருடம் அக்டோபர் 8 வரை ரூ 2477.07 கோடியை சரக்கு போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வே ஈட்டியது. கடந்த வருடத்தின் இதே காலகட்டதின் ரூ 2226.36 கோடியுடன் ஒப்பிடும் போது இது ரூ 250.71 கோடி அதிகமாகும்.

 

2020 அக்டோபரில் 8-ஆம் தேதி வரை இந்திய ரயில்வே கையாண்ட 26.14 மில்லியன் டன்கள் சரக்கில், 11.47 மில்லியன் டன் நிலக்கரி, 3.44 மில்லியன் டன் இரும்பு தது, 1.28 மில்லியன் டன் உணவு தானியங்கள், 1.5 மில்லியன் டன் உரங்கள் மற்றும் 1.56 மில்லியன் டன் சிமெண்ட் அடங்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663185

----



(Release ID: 1663305) Visitor Counter : 111