ரெயில்வே அமைச்சகம்

சரக்கு போக்குவரத்து வணிகத்தை மேலும் அதிக அளவில் ஈர்ப்பதற்கான துறைகள் ரீதியான ஆலோசனைகளை இந்தியன் ரயில்வே தொடங்கியிருக்கிறது

प्रविष्टि तिथि: 05 OCT 2020 8:35PM by PIB Chennai

நிலக்கரி மற்றும் மின்சாரத்துறைகளின் முன்னணி தலைவர்களுடன் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக & தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். நிலக்கரி போக்குவரத்து தொடர்பாக நிலக்கரி மற்றும் மின்சாரம், ரயில்வே துறைகளின் உற்பத்தி செயலாக்கத்தை மேலும் இணைந்து முன்னெடுப்பது குறித்தும் அதற்கான வழிகள் குறித்தும், ரயில்வேயின் நிலக்கரி வணிகத்தை ஒருங்கிணைத்தலை உறுதி செய்வது குறித்தும் அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  
ரயில்வே சரக்குப் போக்குவரத்தில் சராசரியாக 50%  நிலக்கரி சரக்கு கொண்டு செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மொத்த சரக்குப் போக்குவரத்து 1210 மெட்ரிக் டன்கள் ஆகும். இதில் கடந்த ஆண்டு மட்டும்  587 டன் நிலக்கரி ரயில்வே சரக்கு போக்குவரத்து மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.  
இந்த நிகழ்வின்போது பேசிய திரு.பியூஷ் கோயல், “சரக்குகளை எடுத்துச் செல்வதை ஊக்குவிக்க ரயில்வே துறை இடைவிடாத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிகளில் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் வழுக்குவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. நிலக்கரி, மின்சாரம் மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளும் பரஸ்பரம் அதிகபட்ச வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய ரயில்வே, நிலக்கரி மற்றும் மின்சார நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை” என்றார். 
2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.9896.86 கோடி ஈட்டி உள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டுடன்(ரூ.8716.29 கோடி) ஒப்பிடும்போது அதை விட அதிகமாக ரூ.1180.57 கோடியை இந்தியன் ரயில்வே ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.  
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661844


(रिलीज़ आईडी: 1661962) आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu