ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ராமகுண்டத்தில் ஆர் எப் சி எல் அமைத்து வரும் உர தொழிற்சாலையின் முன்னேற்றத்தை திரு மாண்டவியா ஆய்வு செய்தார்

Posted On: 12 SEP 2020 5:54PM by PIB Chennai

ராமகுண்டம் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் (ஆர் எப் சி எல்) ராமகுண்டத்தில் அமைத்து வரும் உர தொழிற்சாலையின் முன்னேற்றத்தை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு மாண்டவியா இன்று ஆய்வு செய்தார்.

 

உள்துறை இணை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, உரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு தரம்பால், ராமகுண்டம் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி திரு நிர்லெப் சிங் ராய் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

 

பணிகளை பார்வையிட்ட பின் திரு மாண்டவியா அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது புதிய உரத்தொழிற்சாலை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து திரு நிர்லெப் சிங் திரு மாண்டாவியாவுக்கு எடுத்துரைத்தார்.

 

பொது முடக்கத்தின் போது பணிகள் சற்று தடைபட்டாலும், 2020 மே மூன்றாம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பொதுக்கூட்டத்தின் போது பணிகளை மேற்கொள்வதற்காக ராமகுண்டம் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டை அமைச்சர் பாராட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653625

 



(Release ID: 1653655) Visitor Counter : 122