விண்வெளித்துறை

பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்

Posted On: 01 SEP 2020 5:19PM by PIB Chennai

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான சாதனையாக, பிரபஞ்சத்தில் உள்ள மிகவும் தொலைவான நட்சத்திர பால்வெளிகளில் ஒன்றை இந்திய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தத் தகவலை இன்று பகிர்ந்துக் கொண்ட மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், பூமியில் இருந்து 9.3 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பால்வெளி ஒன்றில் இருந்து அதிக அளவிலான புற ஊதா கதிர்களை இந்தியாவின் முதல் பல்நோக்கு-அலைநீள விண்வெளி ஆராய்ச்சி நிலையமான 'அஸ்ட்ரோ சாட்' கண்டறிந்துள்ளது பெருமைக்குரியது என்றார்.

விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறனை மீண்டுமொருமுறை உலகத்துக்கு நிரூபித்து காட்டியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.

 

 மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650396 



(Release ID: 1650516) Visitor Counter : 266