சுற்றுலா அமைச்சகம்

தேசிய தலைநகர் டெல்லி பிராந்தியத்தின் (என்.சி.டி) துணைநிலை ஆளுநர் டெல்லியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களைத் திறக்க அனுமதி

Posted On: 19 AUG 2020 7:38PM by PIB Chennai

தேசிய தலைநகர் டெல்லி பிராந்தியத்தின் (என்.சி.டி) துணைநிலை ஆளுநர், விருந்தோம்பல் தொழில்துறையின் கோரிக்கைகளை நிறைவு செய்யும் ஒரு முக்கிய அறிவிப்பாக டெல்லியில் உள்ள ஹோட்டல்களில் ஹோட்டல் மற்றும் உணவகங்களைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளார். தலைநகரில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் செயல்பாடுகளுக்குப் புத்துயிர் அளிக்க இது ஒரு பெரிய நடவடிக்கையாகும்.

டெல்லியில் விருந்தோம்பல் துறையினரின் கோரிக்கைகளுக்கு இணங்குமாறும், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து, இயங்க அனுமதிக்குமாறும் டெல்லி துணைநிலை ஆளுநருடன் திரு. பிரஹ்லாத் சிங் படேல் விவாதித்து, வேண்டுகோள் விடுத்தார். இதற்கு முன்னதாக அவர், இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகத்திற்கும் எடுத்துச் சென்றார்.

 

மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு.பிரஹலாத் சிங் படேல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில்துறை பங்குதாரர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக சுற்றுலாப் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கும் வகையிலும்  அதற்குப் புத்துயிர் அளித்துத் தீர்வு காண்பது குறித்தும், முக்கியமாக உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாகவும்  விவாதித்தார். இதற்கு முந்தைய வாரத்தில், சுற்றுலா தொழில்துறையின் பல்வேறு பிரிவினர்களுடன் மூளைச்சலவை கூடங்களை நடத்தி, அவர்களது  சிரமங்களைக் கேட்டறிந்தார். சுற்றுலா தொழில்துறையின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும் இது.

 

டெல்லியில் ஹோட்டல்கள்  மற்றும்  உணவகங்கள் திறக்கப்படும் என்ற இந்த முக்கிய அறிவிப்பை வரவேற்றுள்ள திரு. பிரஹலாத் சிங் படேல். உள்துறை அமைச்சருக்கும் மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

******



(Release ID: 1647268) Visitor Counter : 124