குடியரசுத் தலைவர் செயலகம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி.
Posted On:
31 JUL 2020 5:26PM by PIB Chennai
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பக்ரீத் திருநாள், தியாக உணர்வு மற்றும் அனைவரின் நலனுக்காகவும் பாடுபட வேண்டுமென்ற தோழமை உணர்வை பிரதிபலிக்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். இந்தப் பண்டிகை தினத்தில், நமது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு, பரஸ்பர நல்லிணக்கத்தை ஊக்குவிப்போம்“ . என்றும் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1642644)
Visitor Counter : 175