குடியரசுத் தலைவர் செயலகம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி.

Posted On: 31 JUL 2020 5:26PM by PIB Chennai

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  “ பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு  எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்ரீத் திருநாள், தியாக உணர்வு மற்றும் அனைவரின் நலனுக்காகவும் பாடுபட வேண்டுமென்ற தோழமை உணர்வை பிரதிபலிக்கிறது

கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.   இந்தப் பண்டிகை தினத்தில்நமது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு, பரஸ்பர நல்லிணக்கத்தை ஊக்குவிப்போம்என்றும் தெரிவித்துள்ளார்.  

                                                                      *****



(Release ID: 1642644) Visitor Counter : 175