ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

என் ஐ பி இ ஆர் ஹைதராபாத் எட்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Posted On: 24 JUL 2020 6:57PM by PIB Chennai

ஹைதராபாதில் உள்ள தேசிய மருந்தாளுமைக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா இன்று மெய்நிகர் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. பட்டம் பெறும் மாணவர்களுக்கும், மருந்தியல் கல்வி ஆராய்ச்சி தேசிய நிறுவனம் (National Institute of Pharmaceutical Education and Research - NIPER) ஆசிரியப் பெருமக்களுக்கும் சாதனையைக் கொண்டாடும் நேரமாக இது அமைந்தது. தெலுங்கானா அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.கே டி ராமராவ் நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக உரையாற்றினார். உலக அளவில் சுகாதாரத் துறையில் மருந்தாளுமைத் தொழில் வல்லுர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியவர்கள் என்று அவர் கூறினார்.

 

2017-2019, 2018-2020 ஆகிய 2 கல்வி ஆண்டுகளுக்கான எம் எஸ் ஃபார்மசி (189) எம்பிஏ ஃபார்மசி (57) பிஎச்டி (24)உட்பட மொத்தம் 270 மாணவர்களுக்கு, இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.

 

*****



(Release ID: 1641046) Visitor Counter : 132