எரிசக்தி அமைச்சகம்

5000 தொழிலாளர்களுக்கும், தேவைப்படுவோருக்கும் அத்தியாவசியப் பொருட்களை ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் விநியோகிக்க உள்ளது

Posted On: 08 JUN 2020 3:53PM by PIB Chennai

மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் (REC), சமூக கடமைப் பிரிவான ஆர்இசி அறக்கட்டளை, கொவிட்-19 முடக்கநிலைக் காலத்தில் 5000 தொழிலாளர்களுக்கும் மற்றும் தேவைப்படுவோருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை விநியோகிக்க உள்ளது.

இந்த நிறுவனம், இம்மாதம் 4-ம் தேதி அன்று தில்லியில் உள்ள 500  பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை  விநியோகித்தது. இதே போல் 7-ம் தேதியன்று குர்கான், நொய்டா பகுதிகளில் 1000 பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

-----



(Release ID: 1630224) Visitor Counter : 164