ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் இயக்கத்தின் ( ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்) கீழ் ஒடிசாவுக்கு ரூ.812 கோடி அனுமதி

Posted On: 01 JUN 2020 5:53PM by PIB Chennai

ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் , நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் போதிய அளவு  தரமான தண்ணீரை வழக்கமாகவும், தொலை நோக்க அடிப்படையிலும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மையான உணர்வைப் பின்பற்றும் வகையில், கிராமப்புற மக்களுக்கு வீட்டு வாசலிலேயே குடிநீர் வழங்கி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இந்த ஜனரஞ்சக திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் இந்த இயக்கத்தின் மூலம், ஒவ்வொரு வீட்டுக்கும் முறையாகவும், நீண்டகாலத்துக்கும் ஒரு நபருக்கு 55 லிட்டர் என்ற அடிப்படையில் குடிநீர் வழங்க இத்திட்டம் வழி வகுக்கிறது.

இந்த இயக்கத்துக்கான மதிப்பீடு ரூ. 3.60 லட்சம் கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2.08 லட்சம் கோடி. மாநில அரசுகளின் பங்கு ரூ.1.52 லட்சம் கோடியாகும்.



(Release ID: 1628765) Visitor Counter : 174