புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு மத்திய அரபிக் கடலில் ‘நிசர்கா’ புயல் ; வடக்கு மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை; ஆரஞ்சு தகவல்.

Posted On: 02 JUN 2020 3:03PM by PIB Chennai

தேசிய வானிலை முன்ன்றிவிப்பு மையம், மண்டல சிறப்பு வானிலை ஆராய்ச்சி மையம், இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் புயல் எச்சரிக்கை பிரிவின் அறிவிப்பு வருமாறு;

கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக நகர்ந்து, தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் இன்று ( 2020 ஜூன் 2-ம் தேதி) இந்திய நேரப்படி காலை 1130 மணியளவில், கிழக்கு மத்திய அரபிக்கடலில் அட்சரேகை 15.6 டிகிரி வடக்கு, தீர்க்கரேகை 71.2 டிகிரி கிழக்கு அருகே, பாஞ்சிமுக்கு(கோவா) மேற்கு-வடமேற்கில் 280 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு ( மகாராஷ்டிரா) தெற்கு-தென்மேற்கில் 430 கிலோ மீட்டர் தொலைவிலும் , சூரத்துக்கு (குஜராத்)  தெற்கு-தென்மேற்கில் 640 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து தீவிரப் புயலாக மாறக்கூடும். அடுத்த சில மணி நேரத்தில், இது வடக்கு திசையில் நகர்ந்து, பின்னர் வளைந்து வடக்கு - வடகிழக்கு திசையில் பயணித்து, வடக்கு மகாராஷ்டிரா, அதையொட்டியுள்ள தெற்கு குஜராத் கரையோரத்தில், ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமனுக்கு இடையே அலிபாக் அருகே ( ராய்கட் மாவட்டம், மகாராஷ்டிரா) ஜூன் 3-ஆம்தேதி பிற்பகலில் தீவிரப் புயலாக அதிகபட்சம் மணிக்கு 100 - 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையைக் கடக்கும்.



(Release ID: 1628720) Visitor Counter : 157