அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஆராய்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவித்தல்; கொவிட்-19 உயிரி வங்கிகள் நான்கினை உயிரித் தொழில்நுட்பத்துறை அமைத்தது

Posted On: 30 MAY 2020 1:48PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, தடுப்பு மருந்துகளை உருவாக்கவும், நோய் கண்டறிதல், சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கொவிட்-19 ஆராய்ச்சி மேம்பாட்டு முயற்சிகளுக்கு மதிப்புமிக்க ஆதாரமாக நோய் பாதித்தவர்களிடமிருந்து திரட்டப்பட்ட மாதிரிகள் இருக்கக்கூடும். கொவிட்-19 தொடர்பான ஆராய்ச்சிக்கு, உயிரி மாதிரிகள் மற்றும் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு நிதிஆயோக் அண்மையில் விதிமுறைகளை வெளியிட்டது. அமைச்சரவைச் செயலரின் அறிவுறுத்தலின் படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சோதனைக்கான கொவிட்-19 நோயாளிகளின் மாதிரிகளைச்  (வாய்த்தொண்டை, நாசித்தொண்டை ,மாதிரிகள், மூச்சுக்குழாய் அழற்சி,  சளி, ரத்தம், சிறுநீர், மலம்) சேகரித்து, இருப்பு வைத்துப் பராமரிப்பதற்காக 16 உயிரிக் களஞ்சியங்களை அறிவித்துள்ளது.

16 உயிரி களஞ்சியங்களின் பட்டியல் வருமாறு; ஐசிஎம்ஆர்-9, டிபிடி-4, சிஎஸ்ஐஆர்-3. உயிரித்தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நான்கு களஞ்சியங்களாவன:- என்சிஆர்- பயோடெக் தொகுப்பு , டிஎச்எஸ்டிஐ, பரீதாபாத் கிளினிகல் சாம்பிள்ஸ் , ஆர்சிபி பரீதாபாத்- வைரல் சாம்பிள்ஸ்,  வாழ்க்கை அறிவியல் நிறுவனம், புவனேஸ்வர்,  இன்ஸ்டெம் பெங்களூர், ஐஎல்பிஎஸ் புதுதில்லி. கொவிட்-19 நோயாளிகளிடமிருந்து வாய்த்தொண்டை, நாசித்தொண்டை ,மாதிரிகள், மூச்சுக்குழாய் அழற்சி,  சளி, ரத்தம், சிறுநீர், மலம்  ஆகியவற்றைச் சேகரித்து, சேமித்து வைத்து, நோய் கண்டறிதல்,சிகிச்சை, தடுப்பு மருந்து போன்றவற்றை உருவாக்க வருங்காலப் பயன்பாட்டுக்கு உதவும்.

மாதிரி சேகரிப்பு, போக்குவரத்து, பிரித்தல், சேமித்தல், பகிர்தலுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை இந்த அமைப்புகள் சீராக உருவாக்கும். கொவிட்-19 நோயாளிகளின் மாதிரிகளுக்கான உயிரி -வங்கிகளின் பங்கு, தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறை, கையாளுதல் தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்கும். கொரோனா தொற்று மாதிரிகளைச் சோதிக்கும் போது உயிரிய பிஎஸ்எல்-3 நடைமுறைகள் கையாளப்படும். புதுமையான  தொழில்நுட்பவியல் கண்டுபிடிப்புகளை உரிய நேரத்திற்குள் உருவாக்கும் வகையில், இந்த கொவிட்-19 உயிரி – வங்கி வசதிகள் உத்திப்பூர்வமான எதிர்காலத் திட்டத்துடன் செயல்படும். உயிரித்தொழில்நுட்பத்துறை இதற்கு ஆதரவளிக்கும். உயிரிக் களஞ்சியங்கள் சோதனைக் கூட மாதிரிகளை, தத்தம் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நோக்கத்துக்குப் பயன்படுத்தும்.

மேலும், நோய் கண்டறிதல், சிகிச்சை முறைகள், தடுப்பு மருந்துகளை உருவாக்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கல்வி, தொழில், வர்த்தக நிறுவனங்களின் வேண்டுகோளை நன்கு ஆராய்ந்து, அது நாட்டு நலனுக்கு ஏற்றது என உறுதி செய்த பின்னர், அந்நிறுவனங்களுடன் மாதிரிகளைப் பகிர்ந்துகொள்ள இந்தக் களஞ்சியங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கூட, கிருமி உயிரி மாதிரிகளைப் பகிர்ந்து கொள்ளுதல்,, புதிய தொழில்நுட்பத்துக்கு மிக முக்கியமானதாக இருக்கும். மேலும், நமது ஆராய்ச்சியாளர்கள், தொழில் தொடங்குவோர், தொழில்துறையினர் ஆகியோரின் உற்பத்தி மேம்பாட்டுக்கும் அது உதவும். இது சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதை நோக்கிய நமது பயணத்திற்கு முக்கிய நடவடிக்கையாகவும் இருக்கும்.

 



(Release ID: 1627906) Visitor Counter : 151