விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண் அமைச்சர் இ-நாம் தளத்தில் புதிய அம்சங்களைத் தொடங்கி வைத்தார்

Posted On: 02 APR 2020 7:36PM by PIB Chennai

மண்டிகளில் கூட்டம் சேராமல் தடுக்கும் விதத்தில், கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை, நேரடியாக மொத்த விலை மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், வேளாண் சந்தைப்படுத்துதலை வலுப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட இ-நாம் என்னும் மின்னணு தேசிய வேளாண் சந்தை தளத்தில் புதிய அம்சங்களை மத்திய விவசாயம், விவசாயிகள் நலன், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.

இதில், (1) உணவுக்கிடங்கு அடிப்படையிலான இ-நாம் மென்பொருளில், இ-என்டபிள்யூஆர்
என்னும்  உணவுக்கிடங்குகள் அடிப்படையிலான வர்த்தகத்துக்கு வழிசெய்யப்படும். (2) இ-நாம் முறையில் எப்பிஓ வர்த்தக முறையில், அவை சேகரிப்பு மையங்களில் திரட்டிய பொருட்களை வேளாண் உற்பத்தி சந்தைக்கு கொண்டுவராமல், வர்த்தகம் செய்ய முடியும். மேலும், இந்த நிலையில்,  விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளைப் பெறும் வகையில், மண்டிகளுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு இடையிலும், சரக்கு போக்குவரத்து முறையை அதிகரிக்க இதில் வழி செய்யப்பட்டுள்ளது.

 

 



(Release ID: 1610619) Visitor Counter : 179