பிரதமர் அலுவலகம்

பெண்களுக்கு ஊக்கமளிப்பதற்காக தமது சமூக ஊடக கணக்குகளை விட்டுக்கொடுக்க பிரதமர் முடிவு

Posted On: 03 MAR 2020 12:00PM by PIB Chennai

மகளிர் தினத்தில் பெண்களுக்கு ஊக்கமளிப்பதற்காக தமது சமூக ஊடகக் கணக்குகளை அவர்களிடம் விட்டுக் கொடுக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

     “இந்த மகளிர் தினத்தில், தங்களது வாழ்க்கை மற்றும் செயல்பாடு மூலம் நம்மை ஈர்த்துள்ள பெண்களிடம் எனது சமூக ஊடகக் கணக்குகளை விட்டுக்கொடுக்க உள்ளேன். இது அவர்கள் லட்சக்கணக்கானோரிடம் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். நீங்கள் அதுபோன்ற பெண்ணா? அல்லது அதுபோன்று ஊக்கமளிக்கக் கூடிய பெண்ணை உங்களுக்குத் தெரியுமா? இதுபற்றிய குறிப்புகளை #SheInspireUs என்ற சொல்லைப் பயன்படுத்தி பகிர்ந்து கொள்ளவும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த மகளிர் தினத்தில், தங்களது வாழ்க்கை மற்றும் செயல்பாடு மூலம் நம்மை ஈர்த்துள்ள பெண்களிடம் எனது சமூக ஊடகக் கணக்குகளை விட்டுக்கொடுக்க உள்ளேன். இது அவர்கள் லட்சக்கணக்கானோரிடம் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும்.  

நீங்கள் அதுபோன்ற பெண்ணா? அல்லது அதுபோன்று ஊக்கமளிக்கக் கூடிய பெண்ணை உங்களுக்குத் தெரியுமா? இதுபற்றிய குறிப்புகளை #SheInspireUs என்ற சொல்லைப் பயன்படுத்தி பகிர்ந்து கொள்ளவும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார். @narendramodi மார்ச் 3, 2020

 

*****



(Release ID: 1605341) Visitor Counter : 130