பிரதமர் அலுவலகம்

புல்வாமா தாக்குதல் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி

Posted On: 14 FEB 2020 12:19PM by PIB Chennai

கடந்த ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த தீரமிகு வீரர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

     அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், “நாட்டைப் பாதுகாக்கும் சேவையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்கள் போற்றத்தக்கவர்கள். அவர்களது தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறவாது” என்று தெரிவித்துள்ளார்.



(Release ID: 1603176) Visitor Counter : 176