பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே நியமனம்
प्रविष्टि तिथि:
17 DEC 2019 11:31AM by PIB Chennai
ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், இம்மாதம் 31 ஆம் தேதியன்று ஓய்வுபெறுவதையொட்டி, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனேயை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 31 ஆம் தேதி பிற்பகல் நாரவனே தமது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
சுமார் 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இவர், தனது பள்ளிப் படிப்பை புனேயிலும், ராணுவ கல்வியில் முதுநிலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர், வடகிழக்குப் பிராந்தியம், கிழக்குப்பிராந்தியம் ஆகிய பகுதிகளிலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையிலும் இவர் இடம்பெற்றிருந்தார். மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1596728)
आगंतुक पटल : 237