மத்திய அமைச்சரவை
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2019 8:33PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் 13 செப்டம்பர், 2019 அன்று கையெழுத்தானது.
முக்கிய விளைவு:
சுற்றுச்சூழல் சீர்கேடுகள், சமுதாயத்தின் மேம்பட்ட பிரிவினரைவிட, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும், வலுவான சுற்றுச்சூழல் வளங்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
----
(வெளியீட்டு அடையாள எண்: 1590783)
வருகையாளர் எண்ணிக்கை : 149
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Telugu
,
Kannada
,
Malayalam