மத்திய அமைச்சரவை

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2019 8:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது.   இந்த ஒப்பந்தம்  சுவிட்சர்லாந்தில் 13 செப்டம்பர், 2019 அன்று  கையெழுத்தானது.

 

முக்கிய விளைவு:

 

சுற்றுச்சூழல் சீர்கேடுகள், சமுதாயத்தின் மேம்பட்ட பிரிவினரைவிட, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும்  ஒவ்வொரு முயற்சியும், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும், வலுவான  சுற்றுச்சூழல் வளங்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.

----

 


(வெளியீட்டு அடையாள எண்: 1590783) வருகையாளர் எண்ணிக்கை : 149