பிரதமர் அலுவலகம்

2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 OCT 2019 8:55PM by PIB Chennai

ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் ஸ்வீடன் மத்திய வங்கியான ஸ்வெரீஜஸ் ரிக்ஸ் வங்கியின் பொருளாதார அறிவியலுக்கான, 2019 ஆம் ஆண்டு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

 

“ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் ஸ்வெரீஜஸ் ரிக்ஸ் வங்கியின் பொருளாதார அறிவியலுக்கான, 2019 ஆம் ஆண்டு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துக்கள்.  வறுமை ஒழிப்புத் துறையில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளார்.  மதிப்புமிக்க நோபல் பரிசை வென்றுள்ள எஸ்தர் டுஃப்லோ மற்றும் மைக்கேல் க்ரீமர் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.



(Release ID: 1588103) Visitor Counter : 115