பாதுகாப்பு அமைச்சகம்

ஆகாஷ் – எம்கே-1எஸ் ஏவுகணையை டிஆர்டிஓ வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது

Posted On: 27 MAY 2019 9:03PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த
ஏவுதளத்திலிருந்து, இம்மாதம் 25 மற்றும் 27-ஆம் தேதிகளில் ஆகாஷ்-எம்கே-1எஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஆகாஷ் ஏவுகணையின் மேம்பட்ட ரகமான, ஆகாஷ்-எம்கே-1எஸ்  முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டதாகும். தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அதிநவீன ஏவுகணையாக ஆகாஷ்-எம்கே-1எஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் ரக ஏவுகணைகள், கட்டளை வழிகாட்டுதல் மற்றும் முனைய தேடுதல் வழிகாட்டல் ஆகிய இரண்டு  வழிகாட்டுதல்படியும் இயங்கக்கூடியதாகும். தேடுதல் மற்றும் வழிகாட்டுதல் செயல்பாடுகள், இரண்டு சோதனைகளின்போதும் உறுதியாக பரிசோதிக்கப்பட்டது. இரண்டு சோதனைகளின் நோக்கமும் எட்டப்பட்டது.

******

 



(Release ID: 1572709) Visitor Counter : 165