மத்திய அமைச்சரவை

முறைப்படுத்தப்படாத நிதிவைப்புத் திட்டங்களைத் தடை செய்வதற்கான அவசரச் சட்டம் 2019-ஐ பிறப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 19 FEB 2019 9:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முறைப்படுத்தப்படாத நிதிவைப்புத் திட்டங்களைத் தடை செய்வதற்கான அவசரச் சட்டம் 2019-ஐ பிறப்பிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பயன்கள்:

சட்டவிரோதமாக நிதி வைப்பை உருவாக்கி முறையாக திருப்பித் தராதவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு போதிய அம்சங்களைக்  கொண்டதாக இந்த அவசரச் சட்டம் இருக்கும். முறைப்படுத்தப்படாமல் நிதிவைப்புத் திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை செய்யவும் இது வழிவகுக்கிறது. ஒழுங்குமுறை விதிகளில் உள்ள இடைவெளிகளையும், கறாரான நிர்வாக நடவடிக்கையில் உள்ள குறைபாடுகளையும், பயன்படுத்திக் கொண்டு ஏழைகள் மற்றும் எளிதில் ஏமாறும் மக்களின் கடும் உழைப்பால் ஈட்டப்பட்ட நிதியை பேராசைக்கார்கள், சட்டவிரோத வைப்புத் தொகையாக்கி பறித்துக் கொள்வதை உடனடியாகத் தடுப்பதற்கு இந்த அவசரச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

-----


(Release ID: 1565380)