பிரதமர் அலுவலகம்

ஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 NOV 2018 6:17PM by PIB Chennai

ஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஜிசாட்-29 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இந்த இரட்டிப்பு வெற்றி, இந்திய மண்ணில் இருந்து இதுவரை இல்லாத வகையில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் தொடர்பு மற்றும் இணையதள சேவையை வழங்கும் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

***

விகீ/ அரவி



(Release ID: 1552801) Visitor Counter : 183