பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

நேபா லிமிடெட் நிறுவனத்திற்கான நிதி உதவிக்கு மத்திய அமைசச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 03 OCT 2018 6:55PM by PIB Chennai

நேபா லிமிடெட் நிறுவனத்தின் புத்துயிரூட்டல் மற்றும் ஆலை  மேம்பாட்டு திட்டத்திற்காக  ரூ. 469.41 கோடி நிதி உதவி அளிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு  ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் நேபா நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனம் பொதுத்துறை செய்தித்தாள் அச்சிடும் நிறுவனம் ஆகும்.

சம்பளம் மற்றும் ஊதியம் அளிப்பதற்காக ரூ. 101.58 கோடி, 400 பணியாளர்களின்  தன்விருப்ப ஓய்வூதிய திட்டத்திற்கான ரூ. 90.83 கோடியும்  இதில் அடங்கும் 

நேபா லிமிடெட் நிறுவனத்திற்கான புத்துயிரூட்டல் மற்றும் ஆலை  மேம்பாட்டு திட்டம் அந்நிறுவனம் சந்தையில் சிறந்து விளங்கவும் மத்திய பிரதேச மாநிலத்தின் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் உதவும்.

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1548462) வருகையாளர் எண்ணிக்கை : 205
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali