மத்திய அமைச்சரவை

இந்தியா-அயர்லாந்து பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் இடையே 2010ஆம் ஆண்டு கையெழுத்தான பரஸ்பர அங்கீகார உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:33PM by PIB Chennai

இந்தியாவின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கும், அயர்லாந்தின் பொதுக் கணக்குகள் சான்றளிப்பு நிறுவனத்திற்கும் இடையே 2010ஆம் ஆண்டு கையெழுத்தான பரஸ்பர அங்கீகார உடன்படிக்கை செயல் வடிவம் பெறும் வகையில், அதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கணக்கு குறித்த ஞானத்தை மேம்படுத்துவது, தொழில்முறை  மேம்பாடு, இருநாடுகளின் பட்டயக் கணக்கு தொழிலை மேம்படுத்தும் வகையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

விளைவு:

   ஒரு நாட்டைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர்கள் மற்ற நாட்டில் தொழில் புரியவும், அவர்களது திறனை புதிய சந்தைகளின் தேவைகளுக்கேற்ப விரிவுப்படுத்திக் கொள்ளவும், இருநாடுகளிலும் வாய்ப்புகளை வழங்கவும், இந்த ஒப்பந்தம் உதவும்.

பின்புலம்:

  இந்தியாவில் பட்டயக் கணக்குத் தொழிலை முறைப்படுத்த 1949ஆம் ஆண்டில் பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு, இந்திய பட்டயக் கணக்காளார் நிறுவனமாகும்.  அயர்லாந்தின் பொதுக் கணக்குகள் சான்றளிப்பு நிறுவனம், ஐந்தாயிரம் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களை கொண்ட கணக்குத் துறை அமைப்புகளில் முக்கியமான நிறுவனமாகும்.

============


(Release ID: 1539185) Visitor Counter : 155