Energy & Environment
நிக்கோபார் தீவு திட்டம்
Posted On:
01 MAY 2026 9:21AM
கிரேட் நிக்கோபார் தீவு திட்டம் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பவளப்பாறைகள் மற்றும் கடல் உயிரினங்கள் மீதான சாத்தியமான சுற்றுச்சூழல் தாக்கங்களை உரிய முறையில் பரிசீலித்த பின்னர் கிரேட் நிக்கோபார் தீவு திட்டத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது திருத்தப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006-ன்படி, அறிவிக்கை, 2006-ல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளபடி அனைத்து புதிய திட்டங்கள் மற்றும்/அல்லது செயல்பாடுகள் அல்லது தற்போதுள்ள திட்டங்கள் அல்லது செயல்பாடுகளை நவீனப்படுத்துவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படுகிறது.முன் சுற்றுச்சூழல் அனுமதியின் செயல்முறை திரையிடல், நோக்கம், பொது ஆலோசனை மற்றும் மதிப்பீடு போன்ற பல்வேறு நிலைகளில் திட்டத்தை ஆய்வு செய்வதை உள்ளடக்கியது. இதுபோன்ற திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்துடன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முக்கிய தேவையாகும்.
இந்திய விலங்கியல் ஆய்வு மையம், பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலீம் அலி மையம், இந்திய வனவிலங்கு நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற உயர்மட்ட சட்டரீதியான மற்றும் சட்டபூர்வமற்ற அமைப்புகளால் பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. மதிப்பீட்டு செயல்பாட்டின் போது ஐஐடி, உன்ஐஓடி, என்சிசிஆர், என்ஐஓ போன்ற சிறப்பு திறன் கொண்ட தன்னாட்சி நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டன. தேவையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தால் நடத்தப்பட்ட மதிப்பீடு சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் விரிவான ஆய்வு, அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான நிபுணர் மதிப்பீட்டுக் குழுவால் திட்டத்தின் மதிப்பீட்டின் போது நடந்தது.வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியானது, சட்டத்தின் இணக்கம், காற்றின் தர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு, நீர் தர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு, ஒலி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள், கழிவு மேலாண்மை, பசுமை வளையம், கடல் சூழலியல், போக்குவரத்து, மனித சுகாதார, சுற்றாடல் மற்றும் இடர் தணிப்பு முகாமைத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
மேலும், சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்கத்தை மேற்பார்வையிட மூன்று சுயேச்சையான கண்காணிப்புக் குழுக்களும் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன: (i) மாசு தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிடுவதற்கான குழு (ii) பல்லுயிர் தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிட குழு (iii) ஷோம்பென் மற்றும் நிக்கோபரியர்கள் தொடர்பான நலன் மற்றும் பிரச்சனைகளை மேற்பார்வையிட குழு ஆகியவை அக்குழுக்களாகும்.
மத்திய அரசு அறிவித்துள்ள தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபார் தீவை முழுமையாக மேம்படுத்தும் வகையில், கிரேட் நிகோபாரின் கலாத்தியா விரிகுடாவில் மிகப் பெரிய சர்வதேச பெட்டகம் ஏற்றி இறக்கும் துறைமுகத்தை உருவாக்க மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், விமான நிலையம். நகரியம் மற்றும் மின்சார உற்பத்தி நிலையம் ஆகிய திட்டங்களும் அடங்கும்.
இந்த துறைமுகத்தை முன்னணி பெட்டக துறைமுகமாக மாற்றும் வகையில் 3 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும். இந்திய துறைமுகங்கள் உட்பட அனைத்து துறைமுகங்களும் அணுகக் கூடிய வகையில், சர்வதேச கப்பல்கள் வந்து செல்லும் வகையில் எளிதான அணுகல், இயற்கையில் 20 மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதி, வர்த்தக கப்பல் பயணப்பாதை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
இந்திய மற்றும் பிராந்திய கப்பல் போக்குவரத்தை ஈர்ப்பதுடன் போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில் இந்த துறைமுகம் உருவாக்கப்படும். ஆசியா-ஆப்பிரிக்கா, ஆசியா-அமெரிக்கா/ஐரோப்பா கண்டெய்னர் வர்த்தக முனையமாக இதனை மாற்ற வகை செய்யப்படும்.
தற்போது இந்தியாவின் சரக்குகளில் சுமார் 75 சதவீதம் வெளிநாட்டு துறைமுகங்களின் மூலமே கையாளப்படுகின்றன. கொழும்பு, சிங்கப்பூர், கிளாங் துறைமுகங்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட சரக்குகள் கையாளப்படுகின்றன. இதில் 45 சதவீதம் கொழும்பு துறைமுகத்தில் கையாளப்படுகிறது. இந்தத் துறைமுகம் உருவானால் ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 220 மில்லியன் டாலரை இந்திய துறைமுகங்கள் மிச்சப்படுத்தலாம். மேலும் இந்த துறைமுகத்தின் மூலம் அன்னிய செலாவணி சேமிப்பு, அன்னிய நேரடி முதலீடு பெருகி இந்தியாவின் இதர துறைமுகங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.41,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த துறைமுகம் 4 கட்டங்களாக உருவாக்கப்படும். திட்டத்தின் முதல் கட்டம் 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழித்துறை அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால், இத்திட்டம் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்க பெரிதும் உதவுவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமையும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் திரு.நரேந்திர மோடியின் புதிய இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158406&ModuleId=3®=3&lang=1
***
PKV/PD
(Explainer ID: 158921)
आगंतुक पटल : 18
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada